உலக சுற்றாடல் தினத்தையொட்டி களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம்தலைமையில் இன்று ( 4 ) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்றலுடன் சுற்றாடல் விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் த.சத்தியக்கௌரி , பிரதேச செயலக கலாசார உத்தியோஸ்தர் , சிறுவர் ,பெண்கள் நலன் உத்தியோஸ்தர்கள் , விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி உத்தியோஸ்தர் , அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் மற்றும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.