மட்டக்குளி தாருள் தக்வா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ட்டக்குளி தாருள் தக்வா கல்வி நிலையத்தின் 2017ஆம் ஆண்டிற்கான குர்ஆன் மனனம் மற்றும் தஃலீமுல் குர்ஆன் மத்ரஸாக்களின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்வி நிலையத்தின் நிறுவனரும்,பணிப்பாளருமான அல்-ஹாபிஸ், அல்-ஹாரி எம்.இஸட்.எம்.யுஸ்ரி தலைமையில் கொழும்பு-02, பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.

நிகழ்வுகள் இரு பகுதிகளாக நடைபெற்றன. காலையில் தஃலீமுல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமல் சர்வதேச பாடசாலையின் அதிபர் முஹமட் ஷஸ்லியும், இரண்டாம் நிகழ்வு மாலை இடம் பெற்றது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் உறுப்பினர் மௌலவி ஏ.எம்.ஏ.அஸீஸ் (மிஸ்பாகி) கலந்து கொண்டிருந்தனர்.

நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும்ää சான்றிதழ்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர். இதன்போது மாணவர்களின் இஸ்லாமிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -