மத்ரஸதுல் ஹூதா அரபிக்கல்லூரி என்ற பெயரில் இலவச பகுதி நேர ஹிப்ல் குர்ஆன் மனனப்பிரிவு

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை,ரொட்டவெவ கிராமத்தில் மத்ரஸதுல் ஹூதா அரபிக்கல்லூரி என்ற பெயரில் இலவச பகுதி நேர
ஹிப்ல் குர்ஆன் மனனப்பிரிவு மத்ரஷா இன்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலைக்கல்வியை முடித்ததன் பின்னால் மாணவர்கள் மத்தியில் மார்க்க கல்வியை விரிவு படுத்தும் நோக்கில் இம்மத்ரஷா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரொட்டவெவ கிராமத்தில் அதிகளவில் விவசாயத்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் தனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையினை மிக ஆர்வத்துடன் கற்பிக்கும் நோக்கில் ஈடுபட்டு வருவதுடன் கல்வியே எதிர்காலம் என்ற சிந்தனையுடன் மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதில் அக்கறையுடன் செயற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இம்மத்ரஷாவினை ஆரம்பிக்கும் நிகழ்வில் ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி பேஷ் இமாம் எம்.நஸார்தீன் மௌலவி மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க மற்றும் மத்ரஷாவின் அதிபர் சமீம்
ஆசிரியர்களான மௌலவி அப்துல்சத்தார். எம்.ஜனுதீன் மற்றும் கிராம புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -