சாந்தனின் ஐந்துபடைப்புகள் பார்வையும் பகிர்வும்


abdul razak-

மது நாட்டின் பெருமைக்குரிய படைப்பாளி சாந்தனின் ஐந்து படைப்புகள் குறித்த பார்வையும் பகிர்வும், கடந்த பெப்ருவரி 25 –ஞாயிறு காலை 9.30 தொடக்கம் 12.30 வரை வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள கொழும்புத் தமிழ்ச் ;சங்க, சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாந்தனின் நூல்களைப் பற்றியபின் வரும் உரைகள் இடம்பெற்றன..
சாந்தனின் “கனவெல்லாம்” மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலைப பற்றி மேமன்கவியும்,“;சிட்டுக்குருவி” சிறுகதைகள் நூலைப் பற்றி மு.தயாபரனும், பயண நூலான “ஒளி சிறந்த நாட்டிலே” நூலைப் பற்றி ஞா.பாலச்சந்திரனும் ,“சாந்தனின் எழுத்துலகம்” நூலைப் பற்றி கலாநிதி ந. இரவீந்திரனும், “என் முதல் வாத்து” மொழிபெயர்ப்புக் கதைகள் நூலைப் பற்றி சட்டத்தரணி இரா.சடகோபனும் உரையாற்றினார்கள்..
அதனைத ;தொடர்ந்து, ‘சிட்டுக்குருவி” -நூலைப் பற்றி திரு. செ. சக்திதரன், ‘கனவெல்லாம்” மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலைப் பற்றி கவிஞர் சடாகோபன், ‘சாந்தனின் எழுத்துலகம்’ நூலைப் பற்ற திருமதி. வசந்தி தயாபரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

எழுத்தாளர் சாந்தன் ஏற்புரையை வழங்கினார்.
கலை இலக்கிய நண்பர்களும், தமிழ்க் கதைஞர் வட்டமும் (தகவம்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -