பத்தரமுல்லை, கிரிந்திவல மற்றும் மாதம்பை ஆகிய பகுதிகளில் ஆர்பாட்டங்களை முன்னெடுத்தவர்கள் குறித்தே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஆர்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பொலிஸ் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக குறித்த பகுதிகளில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கு உரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
