முன்னாள் மகாணசபை உறுப்பினரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி


க்கரைப்பற்றில் அண்மையில் நடந்த மாநகரசபை தேர்தல் தினத்தன்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ. எல். தவமும் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து மற்றுமொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இன்னொருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேற்படி குறித்த சந்தேகநபர்கள் எல்லோரையும் பிணையில் செல்ல நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வழக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்ததேச நபர்கள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதவானுமாகிய ஏ.பீற்றர் போல் சந்தேகநபர்களை பிணையில் செல்ல தான் கட்டளை பிறப்பிப்பதாகவும் உத்தரவிட்டு குறித்த எல்லா சந்தேகநபர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டி இவ்வழக்கை இன்னொரு தினத்திற்கு கூப்பிடுமாறு தவணை வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -