எஸ்.அஷ்ரப்கான்-
நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் 2018.02.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸா முன்றலில் நடைபெறவுள்ளது.
ஏ.எச்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு பிரதம பேச்சாளராக வை.எல்.எஸ்.ஹமீட் கலந்துகொள்ளுகின்ற அதேவேளை விசேட பேச்சாளராக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்களும் கலந்து கொண்டு நடப்புகால அரசியல் விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

