யாழில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை புனரமைப்பு


பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் அருகில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடசாலை கடந்த காலங்களில் பல அறிஞர்களை யாழ் முஸ்லீம் சமூகத்திற்காக உருவாக்கியதுடன் 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் புனரமைக்கப்படாது காணப்பட்டது.

இந்நிலையில் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் முபீன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீலாதுன் நபி நிகழ்வின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் கவர்ச்சியாக நிறப்பூச்சி பூசப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளது




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -