நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான காலம் கனிந்துள்ளது - அமைச்சர் மனோ கணேசன்


நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான காலம் கனிந்துள்ளதாக தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அரசகருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கை ரூபவாகினி கூட்டத்தாபனத்தின் புதிய நல்லிணக்க அலைவரிசை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இலங்கையில் 19 இனக் குழுக்கள் வாழ்ந்து வருகின்றன. தெற்கில் இருந்தும், வட பகுதியிலிருந்தும் நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன குறிப்பிடுகையில்,

இலாப நோக்கம் இன்றி, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான லஸந்த அழகியவண்ண, கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தி எம்.பாரூக் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -