சாய்ந்தமருது நிராகரித்ததன் எதிரொலி! கொழும்பில் அவசரமாகக் கூடுகிறது- முஸ்லிம் காங்கிரஸ்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் எழுந்துள்ள தொங்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று (13) கொழும்பில் ஒன்று கூடுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது சுயேச்சைக் குழுவை தங்களுடன் இணைந்து கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைத்து மேயர் பொறுப்பை ஏற்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை விடுத்த அழைப்பை சாாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் நிராகரித்துள்ள நிலையிலேயே இந்த மந்திராலோசனைக் கூட்டம் கொழும்பில் நாளை நடைபெறுகிறது இதனை விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் என்னிடம் உறுதிப்படுத்தினார்.

கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வட்டார ரீதியாக வெற்றி பெற்றவர்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பிலும் பட்டியல் வேட்பாளர்களாக யார், யாரைத் தெரிவு செய்வது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது என்றும் பிரதியமைசச்ர் ஹரிஸ் என்னிடம் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி நடத்தவுள்ளதாக கூறப்படுவதனையும் அவர் நிராகரித்தார்.

இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்களை அந்தக் கட்சியும் முற்றாக நிராகரித்துள்ளது. கூட்டாச்சி நடத்துவது தொடர்பில் சாய்ந்தமருது சுயேச்சைக் குழுவுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாகவும் ஏனைய எந்தவொரு கட்சியுடனும் இது தொடர்பில் கலந்துரையாடவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் உயர் வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தன.

கல்முனை மாநகர சபையில் நிலையான ஆட்சி ஒன்றை தங்களது கட்சி ஸ்தாபித்த பின்னரே மேயர் பெயரிடப்படவுள்ளார் என்றும் அந்த விட்டாரங்கள் தெரிவித்தன.

இது இவ்வாறிருக்க, கட்சியில் வெற்றி பெற்ற பலரும் தங்களுக்கே மேயர் பதவி வழங்க வேண்டுமென கட்சி தலைமையைக் கேடடுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட வட்டாரங்கள் என்னிடம் உறுதிபடத் தெரவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -