ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தும் -தேசிய காங்கிரஸ்...!

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமாவை பதவி விலக வேண்டுமென்று ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் முறையாக இன்று கோரிக்கை விடுக்கவுள்ளது.

இருப்பினும் பதவி விலகலை ஷுமா ஏற்றுக்கொள்வாரா? என்பது தொடர்பாகத் தெளிவாகத் தெரியவில்லையெனவும் சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகக் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்துவரும் 75 வயதான ஷுமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி ஷுமா நீக்கப்பட்டதுடன் அக்கட்சிக்குப் புதிய தலைவராக துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்து ஷுமாவை விலக்குவதற்கான அழுத்தம் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸில் அதிகரிகத்துக் காணப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக ஷுமா மறுத்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ஷுமாவின் பதவி விலகல் தொடர்பாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அதன் திட்டத்தை இதுவரையில் வெளியிடவில்லையெனவும் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -