இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலாக உள்ளுராட்சிமன்ற தேர்தல்



2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் அமைதியான தேர்தலாக அமையக் கூடுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

52 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேட்பாளர்களுடன் இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் அமைந்திருந்த போதிலும், தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் அமைதி நிலை பேணப்பட்டதாக கபே நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் சேவைகளை திரு.தென்னக்கோன் பாராட்டு தெரிவித்தார்.

வாக்களிப்புக்கு முந்திய காலப்பகுதியில் அமைதிச் சூழல் பேணப்பட்டதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் நாடு முழுவதிலும் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளன. கபே நிறுவனத்தின் 50 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். பப்ரல் நிறுவனமும் நன்கு பயிற்றப்பட்ட ஏழாயிரம் பேரை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது. தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -