ஆலையடிவேம்பு ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளர் ரகுபதி கூறுகிறார்.
காரைதீவு நிருபர் சகா-
எமது மக்களின் இருப்பு அபிவிருத்தி பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத் தயார் என்று ஆலையடிவேம்பு ஸ்ரீலசு.கட்சி அமைப்பாளர் கணேசபிள்ளை ரகுபதி தெரிவித்தார்.
16ஆசனங்களைக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழர்விடுதலைக்கூட்டணி 6ஆசனங்களைப்பெற்று முன்னணியில் உள்ளது.ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களை வேட்பாளர்களாகக்கொண்ட த.வி.கூட்டணி 4586வாக்குகளைப்பெற்று 06ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
3789வாக்குகளைக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 05ஆசனங்களையும் ஜ.தே.கட்சி 2517வாக்குளைப்பெற்று 4ஆசனங்களையும் அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ் 608வாக்குகளைப்பெற்று 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.ஆலையடிவேம்பில் இ.த.அ.கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தெரிந்ததே.
ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தேர்தலில் 6ஆசனங்களை த.வி.கூட்டணியும் 5ஆசனங்களை ஸ்ரீல.சு.கட்சியும் 4ஆசனங்களை ஜ.தே.கட்சியும் 1ஆசனத்தை அ.இ.த.காங்கிரசும் பெற்றுக்கொண்டன. எனவே ஆட்சியமைக்கப் போதுமான ஆசனங்கள் எந்தக்கட்சிக்குமில்லை. ஆதலால் இரண்டாவது பெரும் சக்தியாகவிளங்கும் சு.கட்சி ஆட்சியமைப்பது தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ளும் என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்
இந்தத்தேர்தலில் எமது கட்சிக்கு 3880 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். வரலாற்றில் இம்முறை என்னில் நம்பிக்கைவைத்து அதிகளவான வாக்குகளை அள்ளிவழங்கியுள்ளனர். முதற்கண் அவர்களுக்கு எமது நன்றிகள்.
மக்களது 3880 வாக்குகளுடாக 5 உறுப்பினர்கள் எமது கட்சியில் தெரிவாகியுள்ளனர். நானும் தெரிவாகியுள்ளேன். எமது மக்களின் பாதுகாப்பு இருப்பு அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
அதற்கு உத்தரவாதம் தரும் எந்தக்கட்சியுடனும் சேர்ந்து ஆட்சியமைப்போம்.எனது கடந்தகால சேவைகளை மக்கள் அறிவார்கள். அவை தொடரும்.
வரலாற்றில் முதற்றடவையாக 5ஆசனங்கள் கிடைக்கப்பபெற்றிருப்பது எமது மக்களின் மனமாற்றத்தையும் அபிவிருத்தியின்பால் மக்களுக்குள்ள தாகத்தையும் வெளிப்படுத்திநிற்கிறது. என்றார்.