அரசியல் நிலவரம் தீர்மானிக்க : 10பேர் அடங்கிய குழு தயார்

நாட்டிலுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் நாளைக்குள் தீர்மானம் ஒன்றை அறிவிக்குமாறு தெரிவித்து 10 பேர் அடங்கிய விசேட குழுவொன்றை அமைக்க இன்று(13) இரவு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சற்று முன்னர் நிறைவடைந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காது சென்ற அமைச்சர்கள் பலரிடையே, ஊடகவியலாளர்களின் பகீரத முயற்சியினால் நிறுத்தப்பட்ட அமைச்சர் சஜித் பிரேமதாக ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.

நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், உடனடியாக இக்குழு அறிவிக்கப்படும் எனவும், நாளைய தினமே இக்குழு கூடி உரிய தீர்மானங்களை அறிவிக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -