அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு ஆதரவு - டக்ளஸ்

உள்ளுராட்சி சபை தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தலில் சகல கட்சிகளும் பெருமளவு சபைகளில் அறுதி பெரும்பான் மையை இழந்திருக்கும் நிலையில் தொங்கு நிலையிலேயே நிற்கின்றன. இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கேட்டபோதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அவர் கூறுகையில், உள்ளுராட்சி சபைகளில் அதிகபடி யான ஆசனங்களை பெற்ற கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென இன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் அதிகபடியான ஆசனங்கள் பெற்ற கட்சிக்கும், அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்கும் வெளியில் இருந்து ஆதரவினை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதேபோல் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் எங்கள் கட்சியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -