அம்பாறை மாவட்டத்தில் 1லட்சம்பேர் வாக்களிக்கவில்லை! 4105 வாக்குகள் நிராகரிப்பு:


காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்டத்தில் கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் 98ஆயிரத்து 914பேர் வாக்களிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் வாக்களிக்கத்தகுதியான 5லட்சத்து 673வாக்காளர்களுள் 4லட்சத்து ஆயிரத்து 759 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.அதன்படி 98914பேர் வாக்களிக்கவில்லை.

அதேவேளை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் 20 சபைகளுக்குமான தேர்தலில் வாக்களித்தவர்களின் 4 ஆயிரத்து 105 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி அளிக்கப்பட்ட 401759வாக்குகளுள் 397654 வாக்குகள் செல்லுபடியானதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆகக்கூடுதலான வாக்குகள் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளே கூடுதலாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இங்கு 611 வாக்குகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இம்மாவட்டத்தில் அடுத்து சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் 587 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -