திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், “தாய் சேய் நல பராமரிப்பு” திட்டத்தின் கீழ் ,27-01-2018 அன்று தென்னிந்திய மருத்துவர்களின் அனுசரணையுடன் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள் சம்பந்தமாக வழிகாட்டிகளும் வழங்கப்பட்டது.
“சென்னை ARC சர்வதேச கருத்தரிப்பு மையம்” சார்பில் டாக்டர்கள் திரு சரவணனும் திருமதி மஹாலக்ஷ்மி அவர்களும் கலந்து கொண்டார்கள். இக் கருத்தரங்கில் 90 க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு தனியாக தங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறி ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.