யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு

பாறுக் ஷிஹான்-

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் மீள் குடியேற்றத்துக்கான விஷேட செயலணி ஊடாக 1200 மீட்டர் நீளம் கொண்ட குறித்த வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

சுமார் 48 லட்சம் ரூபா செலவில் அமைச்சரின் மீள் குடியேற்ற இணைப்பாளர் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வீதியுடன் வடக்கு செயலணி நிதி ஒதுக்கீட்டில் 24 வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதி அமைச்சர் அமீரலி ஆகியோர் வருகை தந்ததுடன் குறித்த வீதிகளை புனரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -