பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர இன்று SLFP யில் இணைந்து கொண்டார்

அப்துல்சலாம் யாசீம்,எப்.முபாரக்-
தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர், திருகோணமலை மாவட்ட முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேக்கர இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன்
இணைந்து கொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட அவரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்
திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் அவர் இதுவரை செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்தமை
குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -