ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடவேண்டும் என்றால் என்னை மேயர் வேட்பாளராக அறிவித்தால் மாத்திரமே போட்டியிடுவேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
இம்போட்மிரர் இணையத்தள செய்திப் பிரிவு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்..
சாய்ந்தமருதில் இருக்கும் அழுத்தங்களை எல்லாம் மீறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் நான் போட்டியிடவேண்டும் என்று சொன்னால் என்னை மேயர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நான் கட்சிக்காக ஏராளமாக செலவு செய்திருக்கிறேன். எனவே அப்படி அறிவிக்க தவறினால் தேர்தல் கேட்பதில் இருந்து ஒதுங்கிக் கொள்வேன் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -