கல்முனை நிருபர் எம்.ஐ.சம்சுதீன்-
ஜனாதிபதியின் பசுமைப்புரட்சி வேலைத்தின் கீழ் நஞ்சுத்தன்மையற்ற உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சாய்ந்தமருது கமநலச்சேவை மத்திய நிலையத்தில் விவசாய போதனாசிரியரும் நிலையப் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் தலமையில் நேற்று உப உணவு மரக்கன்றுகள் வழங்கும் வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் அம்பாறை மாவட்ட உதவி விவசாயப்பணிப்பாளர் ஏ.ஏ.நஜீம், பாடவிதான உத்தியோகஸ்தர் யு.எல்.சம்சுதீன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த முதல் கட்டமாக நூறு குடியிருப்பாளர்களுக்கு கத்தரிக்கன்றுகள், கொச்சிக்கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் நடுகை பராமரிப்பு முறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் விவசாய போதனாசிரியரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -