க.கிஷாந்தன்-
தேயிலைத் தடையை நீக்கிய ரஷ்ய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொண்டமான தொழிற்பயிற்சி நிலையம், பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மீளவும் இணைக்கக் கோரியுமான இரு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி பதுளை மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டம் 28.12.2017 அன்று ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்றது.
இதில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

