பாடசாலை மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் சீருடை வவுச்சர்களை மாணவர்களிடம் கையளிக்காது அதன்பொருட்டு புடைவைகளை வழங்குதல் அல்லது வேறு தலையீடுகளை மேற்கொள்ளும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தமது அதிகாரிகளுக்கு நேற்று இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அது தொடர்பாக வெளியாகியுள்ள சில செய்திகள் தொடர்பாக கவனம் செலுத்தியதன் அடிப்படையில் அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சீருடை வவுச்சர் சீட்டுக்களின் ஊடாக பாடசாலை மாணவர்கள் தமக்கு விருப்பமான விற்பனை நிலையத்தில் புடைவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வர்த்தக நிலையங்களை விளம்பரப்படுத்தல், அங்கு கொள்வனவு செய்யுமாறு மாணவர்களை வலியுறுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாடசாலை அதிபர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -