வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி இடும் நடவடிக்கை


ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -

லக வங்கியின் நிதியுதவிடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இரண்டாம் நிலை சுகாதாரத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி இடும் நடவடிக்கை இன்று (28)இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட, ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பிரதேச வீடுகளில் வளர்க்கப்படுகின்ற சுமார் 107 செல்லப் பிராணிகளுக்கு இந்த நோய்த் தடுப்பூசி இடப்பட்டதாக ஏறாவூர் அரச கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை ஏறாவூர் நகர சபை மற்றும் அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து மேற்கொண்டது.

இன்று காலை 8.00 தொடக்கம் ஏறாவூர் - 05 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படுகின்ற செல்லப் பிராணிகளுக்கே இந்த தடுப்பூசி இடும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -