யஹ்யாகானுக்கு மயோன் முஸ்தபா எச்சரிக்கை என்ற செய்தி அப்பட்டமான பொய்யாகும் இது தொடர்பாக மக்கள் குளப்பமடைய தேவையில்லை என யஹ்யாகான் தெரிவித்தார்.
இன்று முகநூலில் சில சதிகாரர்களால் வெளியீடு செய்யப்பட்ட மயோன் முஸ்தபா யஹ்யாகானுக்கு எதிராக பிரச்சாரம் என்ற செய்தி தொடர்பாக எனது தாய் மாமா மயோன் முஸ்தபாவை தொடர்புகொண்டு கேட்டபோதே தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.
ஊர் ஊராக நோட்டிஸ் அடிப்பதும் வீடு வீடாகச் செல்வதும் எனது நிலைப்பாடு அல்ல எனது நிலை வேறு. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இது அப்பட்டமான பொய் வதந்தியாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.
குடும்ப உறவுகளை குழப்பி கீழ்த்தரமாக அரசியல் செய்து பழக்கப்பட்டவர் அல்ல மயோன் முஸ்தபா என்னும் கனவான் அரசியல்வாதி.
அவரை எமது மக்கள் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்த தவறிவிட்டு இன்று கைசேதப்படுகின்றனர்.
சாய்ந்தமருது மக்களிடம் 3 முறை ஆணை கேட்டார், வேண்டுமென்று நிராகரித்தனர். மயோன் முஸ்தபா சொன்ன எந்த நல்ல திட்டத்தையும் கேலியாக பார்த்தனர். அவரை புறக்கணித்து செயல்பட்டனர்.
இன்று எல்லோரும் குசுகுசு மந்திரம் ஓதுகின்றனர். அவரை நிராகரித்த வலியை உணர்ந்துள்ளனர்.
வீதி வீதியாக அதுவும் குடும்ப உறுப்பினர் எனக்கு எதிராக களமிறங்க எந்த தேவையும் அவருக்கு இல்லை. அவர் வீதி வீதியாக வந்த போது என்னவென்று கூட கவனிக்காதவர்கள் இன்று மயோன் மீது அனுதாபம் காட்டுவது போல் நடிக்கின்றனர். அரசியலுக்காக எமது குடும்ப உறவை சீர்குலைக்க முயற்சிக்கும் சதிகாரர்களின் திட்டம் ஒருபோதும் பலிக்காது.