இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர்.
பிரதி அமைச்சருடனான முரண்பாட்டினால் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீருடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கைகோர்த்திருந்தார்.
அத்துடன் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரினால் வீடமைப்பு அதிகார சபை தவிசாளராக நியமிக்கப்பட்டு செயற்பட்டு வந்ததுடன் அண்மையில் ஆளுநர் இப்பதவிகளை அதிரடியாக மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த செய்தி தொடர்பில் முன்னை நாள் பிரதேச சபைத்தவிசாளரும், வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பி.எஸ்.ஹமீட் அவர்களை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:
நான் எனது ஊரில் இருக்க விரும்புகிறேன். என் மக்களுக்கான அரசியலை மக்களுடன் இருந்து கொண்டே செய்வது நன்றாகவிருக்கும் என்பதற்காக இன்னம் முடிவு எடுக்க வில்லை. அனைத்து தரப்பும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன முடிவு எடுக்கப்படும் என்று இப்பொழுது கூற முடியாது. ஆனால் மாற்றம் ஒன்று ஏற்படும் என்றும் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
