திருகோணமலை மாவட்ட செயலக நத்தார் விழா



A.H.HASFAR HASFAR=

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் நிகழ்வு இன்று(27) மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

தமது தனிப்பட்ட வாழ்விலும் சரி அலுவலக வாழ்விலும் சரி அரச அதிகாரிகளாகிய நாம் சில நேரம் பொதுமக்களின் விமர்சனங்களுக்கோ அல்லது நல்லபிப்பிராயத்திற்கோ உட்படலாம். எது எவ்வாறு இருப்பினும் எமக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் விமர்சிப்பவர்களை நாம் கடவுளின் பொருட்டால் மன்னித்து விட்டேன் என்று கருதி செயற்படுதல் வேண்டும் என்றும் தான் அதனடிப்படையில் அதன் பிரகாரம் செயற்படுவதாகவும் தமது கடமைகளை செவ்வனே பக்கசார்பின்றி செய்யும் போது உயரிய பிரதிபலன் கிடைக்கும் என்றும் இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நத்தார் செய்தியை அருட்தந்தை போல் ரொபின்சன் நிகழ்தியிருந்ததுடன் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் இமாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்இ மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.கலைஞானசுந்தரம்இ மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் உட்பட  பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -