இரவு நேரத்தில் நகர சபைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட செயலாளர் ஊழியர்களின் செயற்பாட்டை கண்காணித்தார்.





ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகர சபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ் சபையின் பராமரிப்பில் உள்ள கட்டையாறு பொழுது போக்கு பூங்கா, விருந்தினர் விடுதி, கிண்ணியா பொது நூலகம், ஆலங்கேணி பொது நூலகம், திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவு, போன்ற இடங்களில் சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இரவு நேர கள விஜயத்தினை நேற்றிரவு(19)மேற்கொண்டு பரிசீலனை செய்ததுடன் அவ்விடயங்களில் காணப்பட்ட முறைப்பாடுகளையும் கேட்டறிந்தார்.

அத்துடன் பொது மக்களின் முறைப்பாட்டுக்கமைவாக பொருத்தப்பட்ட வீதி மின் விளக்குகள் சம்பந்தமாகவும் பார்வையிடப்பட்டதுடன் மேலும் திருத்த வேண்டிய, பழுதடைந்த மின் குமிழ்களையும் பார்வையிட்டு திருத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக இதன்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -