எம்.எம். முஹம்மட் பைறூஸ்-
இவ்வைபவம் சூடுபத்தினசேனை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் (சேதனப்பசளை உற்பத்தி நிலையம்) ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் நடைபெற்றது.
திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு, பூங்காக்கள் மற்றும் வெளிக்களக் கடமைகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த மழைக்காப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது எமது பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலும், திண்மக் கழிவகற்றல் உட்பட பொதுமக்களுக்குரிய சேவைகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளும் வகையில் ஊழியர்களுக்கு மழைக்காப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.
சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.எம். நஸீர், சுகாதார மேற்பார்வையாளர்களான எம்.ஜே. அல்பத்தாஹ், எஸ்.எம். அக்பர் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எச். றஹ்மான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.