சாய்ந்தமருதில் தேர்தலில் போட்டியிடாதிருக்க ஹக்கீம் தீர்மானம்..!!



திர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 23வது வட்டாரத்தில் போட்டியிட விருந்த தொழிலதிபரும் சுகததாச விளையாட்டு மைதான பணிப்பாளர்களில் ஒருவரும் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது 16 ஆம் பிரிவு அமைப்பாளருமான ஹக்கீம் ஷரீப் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஹக்கீம், கடந்த காலங்களில் கட்சியின் நலனில் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டவர்களில் ஒருவருகும்.

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது என்றும் அந்தக் கோரிக்கையை வென்று எடுப்பதற்க்காக பள்ளிவாசல் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே தான் இவ்வாறானதொரு அவசரமான முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அதேவேளை கட்சியில் தொடர்ந்தும் இணைந்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியை படித்துவிட்டு குழம்பி விடவேண்டாம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அல்ல சாய்ந்தமருது ஹக்கீமின் கருத்தே இங்கே பதிடப் பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -