கல்முனை சாஹிராவில் இம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு


எம்.எஸ்.எம்.ஸாகிர்-

2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தரா தர உயர்தரப்பரீட்சையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி, தனக்கும் தங்களது பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஒரு வைத்தியர், 9 பொறியலாளர்கள் என ஏறக்குறைய 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விபரம்:

உயிரியல் விஞ்ஞானப்பிரிவில், ஜே.ஐ. அஹமத் ஸஹ்ரி. பொறியியல் பிரிவில், எப்.எம். சர்ஹான், ஏ.எச்.எம். சாஜித், எப். ஏ. அஸீப் ஸாஹி, ஏ. ஆர். அதீப், எம்.வை.எம். கலீவ், எம். ரீ. எம். ஸர்பத் அப்ஸான், யூ.எல். ஆஹில், யூ.எல்.எம். அஹ்னாப் சியாப், ஏ. ஏ. சரோத் சுஜா. பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில், என்.எம். நிப்ராஸ், எம். டபிள்யூ. எஸ். உமர் பாரூக், என். ஆர்.டி. லிவோன் ராகில், ஏ. எம். ஜாஹித், எஸ்.எம். சப்றாஸ். உயிரியல் தொழில்நுட்பப்பிரிவில் ஆர். ஏ. ராயிஸ், ஏ.எம். றுஸ்தி, பீ.எம். இஸ்ரத், ஆர்.எம். அம்ஜத். வர்த்தகப்பிரிவில், எம். ஏ. எம். ஹாதிக், எம்.என்.எம். நஸாத் நஸ்யன், எம். கே. எம். றகுமத்துல்லாஹ், என்.எம். உமைர், எம்.எம். ஆபிர். கலைப்பிரிவில், எம். ஏ. எம். றிஸ்தி, டீ. ஆர். அபூ பிர்னாஸ். ஏனைய பிரிவில், என்.எம். இபாம் என 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தங்களை கல்வியில் முழுமையாக அர்ப்பணித்து, சிறந்த முறையில் கற்று, உயர் பெறுபேறுகளைப் பெற்று, தங்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் சிறந்த நற்பெயரைக் தேடிக் கொடுத்தமைக்காக மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர். எம்.எஸ். முஹம்மத், தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வகுப்பாசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -