திம்புலாகல நுவரகலவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
நான் நியமித்துள்ள பிரதிநிதிகளை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தைப்போன்று இலங்கையிலுள்ள முன்னாள் பிரதேச சபைகளின் தலைவர்களில் எத்தனை பேருக்கு இம்முறை தேர்தலிலில் போட்டியிட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது? திம்புலாகல பிரதேச சபைத் தலைவர் குற்றவாளியாக காணப்பட்டமையை நீங்கள் அறிவீர்கள். பொலன்னறுவையில் மாத்திரம் முன்னாள் தலைவர்கள் நால்வர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
இதன்போது நுவரகல கிராம மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, பொலன்னறுவை சிறிபுற பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.