வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது ஒகி புயலாக வலுப்பெற்றது.
தமிழக - கேரள கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த ஒகி புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின.
வரலாறு காணாத வகையில் அந்தப் பகுதிகளில் மழை வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஒகி புயல் ஏற்படுத்தி சென்றுள்ளது.
கடலுக்குள் சென்ற மீனவர்களில் சிலர் நீரில் மூழ்கி இறந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கேரளத்தின் ஆலப்புழா கடல் பகுதியில் நேற்று காலை 3 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 96 மீனவர்களை காணவில்லை எனவும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -