பட்டமிட்ட றிம்ஸான் 15வயது சிறுவன் பரிதாப மரணம்...

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை சோனகவாடி பகுதியில் 15 வயது சிறுவன் பட்டமிட்டுக்கொண்டிருந்த போது பட்டம் மரத்தில் சிக்கியதால் அதனை களட்ட சென்ற சிறுவன் மரத்திலிருந்து வீழ்ந்து இன்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த ஆர்.எப்.எம்.றிம்ஸான் (15வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவன் சோனகவாடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்குள் தனது நண்பர்களுடன் பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது மரத்தில் சிக்குண்ட நிலையில் அதனை களட்ட மரத்தில் ஏறிய போது கால் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதேவேளை சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவன் விழுந்தமையினால் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டமையினாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -