தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்துக்கு, பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞனை பிடித்த பிரதேச மக்கள் குறித்த இளைஞனை தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது தலவாக்கலை கூம்மூட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் 9.12.2017 சனிக்கிழமை நண்பகல் தலவாக்கலை நகருக்கு பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை குறித்த சிறுமியை பின்தொடர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கூம்மூட் தோட்ட வீதியில் வைத்து சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முற்பட்டவேளை சிறுமி கூக்குரல் சத்தம்மிட குறித்த இளைஞன் தப்பியோட முயற்சித்துள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஓருவர் சிறுமியின் கூக்குரலை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு பிரதேச மக்களை கூக்குரலிட்டு அழைத்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞனை தலவாக்கலை நகர சபைக்கு பின்னாலுள்ள வீதியோரத்தில் வைத்து மடக்கி பிடித்து தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞன் நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் இவர் பல தடவைகள் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த இளைஞனை கைது செய்த தலவாக்கலை பொலிஸார் 10.12.2017 வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்துள்ளார்.