20 அடி பள்ளத்தில் விழுந்த வேன் 3பேர் வைத்தியசாலையில்

தலவாக்கலை பி.கேதீஸ்-

லவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் 9.12.2017 மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயடைந்த நிலையில் நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹேமசந்திரா மாவத்தை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த வான் ஒன்று அதி வேகம் காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்திலிருந்த வீடொன்றின் முற்றத்தில் வீழ்ந்துள்ளது. 

இதில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -