சாய்ந்தமருது மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் ஜனாதிபதியின் SLFP க்கு ஆதரவளிக்க முடிவு..!

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி மன்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள இவ்வேளை இன்று (21) சாய்ந்த மருது பள்ளிவாயல் தலைவர் தலைமையில் இடம்பெற்ற பிரமாணடமான கூட்டத்தில் தங்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தினை வழங்கினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே சாய்ந்தமருது ஒருமித்து வாக்களிப்போம் என்று ஊர் தீர்மானம் அறிவிக்கப்பட்டன.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கும் ஒரு கோரிக்கையினை பள்ளிவாயல் தலைவர் முன்வைத்தார். எங்கள் உள்ளூராட்சி சபையினை அமைக்க நீங்கள் ஆதரவு வழங்கினால் இனிவரும் காலங்களில் உங்களுக்குத் தேவையான ஆதரவினை (தேவையான உதவிகளை) நாங்கள் வழங்குவோம் என்றும் தெரிவிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -