இன்று அம்பாறைக் கரையோரம் அல்லோலகல்லோலம்! மக்கள் பதட்டம் பீதி -இன்றய படங்கள்

காரைதீவு நிருபர் சகா-

ம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசம் எல்லாம்இன்று (15) புதன்கிழமை பகல் சுனாமி என செய்தி பரவியதையடுத்து அல்லோலகல்லோலமாகியது.

நீலாவணை தொடக்கம் கல்முனைசாய்ந்தமருது காரைதீவு நிநதவூர் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் வரை இப்பதட்டமும் பீதியும் நிலவின.

கடல் உள்வாங்கியயதாகவும் கரையோரத்திலுள்ள பல கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக சடுதியாக குறைந்தமையும் என்ற செய்தி பரவியதையடுததுஇப்பதட்டத்திற்குக் காரணம்.

எனினும் சுனாமி அனர்த்த எச்சரிக்கை கோபுரம் அலறவில்லை. பொலிசார் மற்றும் அனர்த்தமுகாமைத்துவப்பிரிவினர் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

எங்கு பார்த்தாலும் மக்கள் பயபீதியுடன் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பிரதானவீதியை நோக்கி ஓடிவந்தனர்.

பாடசாலைகள் இழுத்துமூடப்பட்டன. பிள்ளைகளை அழைத்துச்செல்ல பெற்றோர்கள் முண்டியடித்தனர்.

அலுவலகங்களில் இருந்த அலுவலர்கள் தொடக்கம் அனைவரும் பீதியில் வெளியேறினர்.

இது வதந்தி பீதியடையவேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவுப்பணிப்பாளர் சியாட் தெரிவித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -