நைஜீரியாவின் வடகிழக்கு நகரான முபியில், பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.
காலை நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலில் ஆண்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவராக பள்ளிவாசலினுள் பதின்ம வயது நபர் ஒருவரும் நுழைந்தார்.
சில நிமிட நேரத்தில் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை அவர் வெடிக்கச் செய்தார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பலியாகினர்.
சுமார் முப்பது பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும், தற்கொலை குண்டுதாரியின் வசம் போகோ ஹராம் இயக்கத்தின் இலச்சினை இருந்ததாக பொலிஸார் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -