பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்களுக்கு முடிவுகட்ட இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை அரசு

அதிகரித்து வரும் பாதாள உலக கோஷ்டிகளின் மோதல் சம்பவங்களையடுத்து, இதுபோன்ற கோஷ்டிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கு மூன்று விசேட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சர்வதேச பொலிஸ் நிறுவனமான ‘இன்டர்போல்’ உடன் இணைந்து இயங்கவுள்ளனர்.

பாதாள உலகக் கோஷ்டி மோதல்களில் கடந்த வாரம் மட்டும், பாடசாலை மாணவன் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எனினும், இந்த கோஷ்டிகளின் தலைவர்கள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்தே இன்டர்போலின் உதவியுடன் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் மூன்று விசேட குழுக்கள் இறங்கியுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -