மனைவியின் பதில் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி



கமல்- 
வென்னப்புவ பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

குடி போதையில் மனைவியை தாக்க முயற்சித்த நபர் ஒருவர் மனைவியின் பதில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.45 அளவில் நடந்துள்ளது. வென்னப்புவ பாத்திமா மாவத்தை வசித்து வந்த 49 வயதான மாசேவ்வகே சுஜி சமிந்த துஷார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் 48 வயதான மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். தினமும் குடி போதையில் வரும் கணவன் தன்னை அடிப்பதாகவும் சம்பவம் நடந்த நேரத்தில் கணவன் தன்னை தடியொன்றினால் தாக்க முயற்சித்ததாகவும் அப்போது அந்த தடியை பறித்து தான் கணவன் மீது பதில் தாக்குதல் நடத்தியமையினா‍லேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் உயரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் மாராவில நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -