விதவைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு...


முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவினரால் விதவைகளுக்கான வாழ்வாதர உதவிப் பணம் வழங்கும் நிகழ்வு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு 29-11-2017, இன்று நிந்தவூர் பிரதேச செயலக சமூகசேவை பிரிவு காரியாலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விதவைகளுக்கான உதவிப் பணமாக தலா 25000 ரூபாய் வீதம் இரு விதவைகளுக்கும் ரூபாய் 50000 முதல் வழங்கப்பட்டதோடு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் T.M.M. அன்சார் அவர்கள் கலந்துகொண்டதோடு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் M.I.M. முர்சித், கிராம நிருவாக உத்தியோகத்தர் A.M.சம்சுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.S.ஜெமீலா மற்றும் சமூக சேவை அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு இவ்வுதவிப் பணம் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கிவைத்தனர்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவானது தமது சேவையை உரிய முறைப்படி அரும்பெரும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -