பசு மாடுகளைத் திருடி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த வாகனத்தை மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸார் கையுமெய்யுமாக பிடித்துள்ளனர்.
வாகனம் மாடுகளுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அந்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று பசு மாடுகளை திருடிச் சென்றமை தொடர்பாக மாட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு-கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துகொண்டிருந்த வேளையில் பிரதான வீதியில் கடமையிலிருந்த பொலிஸ் குழுவினர் திருடிச்சென்ற மாடுகளுடன் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
கிரான் ஈரளக்குளம் பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி இந்த வாகனம் சென்றுகொண்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.