மானிப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஆவாக்குழுவினை சேர்ந்த நபரை நேற்று(29) மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.
கைதான இளைஞன் மாசியப்பிட்டி சண்டிலிப்பாய் பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 14ம் திகதி சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் கோண்டாவில் பகுதிஇ ஜந்து சந்தி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் நேரடி தொடர்புபட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் கூறினர்.
