அரசாங்கத்தின் பிரபல முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தனர்

ரசாங்கத்தின் பிரபல முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இரு அமைச்சர்களில் ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்பதுடன் முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், மற்றைய அமைச்சர் அரசாங்கத்தின் ஓர் இராஜாங்க அமைச்சராக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சர்கள் தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் ஆசனம்பெறுவது தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருப்பதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -