மர்ஹூம் அஸ்ரப் மரணம் தொடர்பில் திடீர் ஞானம் பிறந்ததன் மர்மம் என்ன -பேரியல் கேள்வி

னது கணவர் மர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பாக 17 வருடங்களின் பின்பு ஏன் திடீரென தேடுகிறார்கள்? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. பேரியல் அஷ்ரப்.

"எனது கணவர் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக 17 வருடங்களின் பின்பு ஏன் திடீரென தேடுகிறார்கள்? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இத்தனை காலம் அமைச்சுப் பதவிகளிலும் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் இருந்த அவர்கள் அப்போது இது தொடர் பாக ஏன் தேடிப்பார்க்கவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சரும், மர்ஹூம் அஷ்ரபின் துணைவியாருமான பேரியல் அஷ்ரப்.
மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலி கொப்டர் விபத்தில் மரணமானதையடுத்து விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

அவ் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றினைப் பெற் றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் முயன்றபோது அது நிராகரிக் கப்பட்டது.

பின்பு தகவல் அறியும் ஆணைக் குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்தபோது குறித்த அறிக்கை தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மர்ஹூம் அஷ்ரபின் துணைவியார்தொடர்ந்தும் கருத்து தெரி விக்கையில்:

"மர்ஹும் அஷ்ரபின் மரணத்துக்கான காரணத்தையும் அதன் பின்னணியையும் இப்போது தேடுபவர்கள் அவர்கள் பதவிகளில் இருந்தபோது தேடியிருந்தால் இரக சியங்கள் வெளிப்பட்டிருக்கும்.

ஏன் இப்போது திடீரெனத் தேடுவதற் கான அவசியம் ஏற்பட்டது. அவரின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியி லிருந்து மீண்டிருக்கும் எனக்கும் எனது மகனுக்கும் இது கஷ்டமாக இருக்கிறது .

17 வருடங்களின் பின்பு பழைய கதைகளையும் சம்பவங்களையும் கிண்டி எடுக்க வேண்டிய நோக்கம் என்ன?

அவர்களுக்குத் தெரிந்த இரகசியங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

அனைத்து விடயங்களும் அப்போதைய ஜனாதிபதியின்காலத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வரு டங்களின் பின் இதனைத் தேடிப் பார்த்து என்ன செய்யப்போகி றார்கள்? இதன் நோக்கம் என்ன ? என்றார்.

மர்ஹும் அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அரநாயக்க, குமாரபுர, ஊராகந்த மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் அஷ்ரப் உட்பட 15 பேர் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப் பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீதிபதி எல்.கே.ஜி.வீரசேகர தலை மையில் ஆணைக்குழு ஒன்றினை நியமித்தார்.

ஏ.ஆர்.ஏ.பரில் - விடிவெள்ளி -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -