மகனின் மனைவியை வல்­லு­ற­விற்குட்­ப­டுத்த முயன்ற மந்திரவாதி மாமனார்-தூக்­கிட்டு தற்­கொலை

ரு­ம­களை வல்­லு­ற­விற்குட்­ப­டுத்த முயன்ற விடயம் மக­னுக்கு தெரிய வந்­த­மையால் மந்­திரவாதி மாமனார் ஒருவர் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்ட சம்­ப­வ­மொன்று கம்­பளை பிர­தே­சத்தில் இடம்பெற்­றுள்­ளது.

தற்­கொலை செய்­து­கொண்­ட­வ­ர் 52 வயதான சந்­திரசிறி குல­ரட்ண என்ற மூன்று பிள்­ளை­களின் தந்தையாவார்.

இச்­சம்­பவம் கம்­பளை வத்­தே­ஹேன பகு­தியில் நேற்­று­முன்­தினம் மாலை இடம் பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

மேற்­படி மந்­தி­ர­வாதி தனது வீட்­டுக்கு அரு­கா­மையில் சிறிய கோவில் ஒன்­றினை அமைத்து அதில் மந்­திர வேலைகளில் ஈடு பட்டு வந்­துள்ள நிலையில் சம்­ப­வ­தினம் கோயிலை சுத்தம் செய்ய தனது மூத்த மகனின் மனை­வி­யான 22 வயதான மருமகளை அழைத்துள்ளார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் குறித்த நபர் மரு­ம­களை வல்­லு­ற­விற்குட்­ப­டுத்த முயன்ற வேளை, மரு­மகள் கூச்­ச­லி­டவே அவ்­வி­டத்­திற்கு வந்த மகன் தந்­தையை தாக்­கி­விட்டு மனை­வி­யுடன் வீட்­டி­லி­ருந்து வெளி­யேற முற்­பட்­டுள்ளார்.

இதன்போது குறுக்­கிட்ட மந்­தி­ர­வாதி பிள்­ளை­களை வெளி­யேற விடாமல் தடுத்­துள்­ள­துடன் தான் வெளி­யே­று­வ­தாக கூறி வீட்டை விட்டு சென்றே கோயிலுக்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -