ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீமிற்கு மிகவும் இக்கட்டான அரசியல் சூழ் நிலைகளில் கை கொடுத்தவரும்இ கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூர் அலிஷாஹிர் மெளலானா மூலம் மரச்சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வதற்கு முக்கிய காரண கர்த்தாவான இருந்த ஓட்டமாவடி சபீர் மெளலவி தனது வேலையிலிருந்து திடீர் இராஜினா செய்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் குறித்த விடயம் சம்பந்தமாக சபீர் மெளலவியினை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது எதற்காக தான் இராஜினாமா செய்துள்ளார் என்பதை பற்றி ஏதும் கருத்தினை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
குறித்த திடீர் இராஜினாமாவானது கட்சியின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீமின் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீர் வழங்கள் சபையின் சட்ட விரோத பாவனை தடுப்பு பிரிவில் கடமை புரிந்த பதவியே இராஜினாமா செய்துள்ள பதவியாகும். சபீர் மெளலவியானவர் ஓட்டமாவடி பிரதேசத்தில் முக்கிய அரசியல் காய் நகர்த்தல்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேற்கொண்டு வந்தவர் என்ற வகையில்இ கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் முக்கிய பிரச்சனையாக காணப்பட்ட கல்முனை மேயர் பிரச்சனையினை தீர்த்து வைப்பதற்காக மேயர் சிராஸ் மீராஷாஹிப்பினை இராஜினாமா செய்வைத்து நிசாம் காரியப்பருக்கு அப்பதவியினை கையளிக்க வைத்து கட்சியின் தலைமைக்கும் பாரிய பங்காற்றிய சபீர் மெளலவி கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அலி சாஹிர் மெளலானா முஸ்லிம் காக்கிரசில் வெற்றியடைவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் என்பது முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடம் மட்டுமல்லாது அடிமட்ட போரளிகள் கூட அறிந்த விடயமாகும்.
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பாளாராக நியமிக்க பட்ட சபீர் மெளலவி ஓட்டமவடி பிரதேசத்தில் தேசிய அரசியல்வாதிகளுக்கு நிகராக அதிகமான வேலை வாய்ப்புக்களை படித்த இளைஞர்களுக்கு வழங்கியுள்ளமை கல்குடா பிரதேசத்தில் பலராலும் பரவலாக பேசப்படும் விடயமாகவும் மாறியுள்ள அதே நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தனது அரசியல் தலைவன் அண்மைக்காலமாக சபீர் மெள்லவி கூறி வருது குறித்த இராஜினாமவிற்கு முக்கிய காரணமாக அமையலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக ஊகிக்க கூடியதாக உள்ளது.
எது எவையாக இருந்தாலும் ஓட்டமவடி பிரதேச சபையில் சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியில் களமிரங்குவாரானால் நிச்சயமாக ஓட்டமாவடி பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி 1994ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கைப்பற்ற கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதும் மறுபக்கத்தில் இருக்கின்ற உண்மையாகும்.
அத்தோடு சபீர் மெளலவியின் குறித்த இராஜினாமாவானது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாமல் தேசியத்திலேயே பாரிய பின்னடைவினை ஏற்படுத்துவதோடு தலைமைக்கும் பாரிய நெருக்கடியினை கொடுக்கும் என்பதில் மாற்று மருத்திருக்க இடமில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் இருக்கின்றது.
