விபத்தில் ஒரே குடும்த்தை சேர்ந்த 03 காயம்.




முர்சித்-

ட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியில் கறுவாக்கேணி சந்தியில் இன்று திங்கள் கிழமை மாலை 05.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

திருகோணமலையில் இருந்து அம்பாரை நோக்கி வந்த தனியார் பஸ்சும் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மீறாவோடைக்குச் செல்வதற்கு கறுவாக்கேணி சந்தியால் திருப்புவதற்கு முயன்ற முச்சக்கர வண்டியில் பின்னால் வந்த பஸ் மோதியதாலயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவருவதாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை அப்பகுதியில் உள்ள சில்லறைக்கடையில் பொருட்கள் வாங்கவதற்காக கடைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இவ் விபத்தில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த வீ.ரஜீந்திரன் (வயது – 32) அவரது மனைவி தனுஜா ரஜீந்திரன் (வயது – 27) அவர்களது மகள் தருனிஜா (வயது – 06) என்பவர்களே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -