மாலைத்தீவில் மிகப் பெருமளவு எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் பறிமுதல்

மு.மு.அப்துல் ஜப்பார்-

நெதர்லாந்தில் இருந்து மாலைத்தீவிற்கு கடத்தப்பட்ட மிகப் பெருமளவு எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் மாலைத்தீவு சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து அட்டு நகரை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப் பட்ட பொதி ஒன்றை சோதனை செய்த போது, 244.06 நிறையுடைய பல்வேறு நிறங்கள் மற்றும் வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்ட 500 க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப் பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தவகை போதை மாத்திரைகள் மிகப் பெருமளவில் மாலைத்தீவிற்கு கடத்தப் பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என சுங்க அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்ப்பில் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஹ்மது ஷிஃபான் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -